திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
101
'சுடர்வி வாகைக் கடிமுதல் தடிந்த
தார்மிகு மைந்து’
-பதிற்: 40:15-16
'இறுவரை வேங்கை ஒள்வி சிதறி' - கலி: 41:11
'சிறுபீர், வீரர் வண்ணம் கொண்டன்று' - அகம்: 57:13
- 'வீ'யின் இரண்டாம் நிலைச்சொல்
‘பெரும்பெயல் தலைஇய வீஇத் தாங்கு’ - குறுந்: 165:4
'வீஇ' எனும் வடிவம் 'வீந்து' வீயும், 'வீயா' என்று வளர்கிறது.
‘தீம்புனல் தெரிதர வீந்து உக்கா அங்கு’ - குறுந்: 149:4
‘மாசுணம் வீயும் நீள் அத்தம்’ - திணை.மா: 75:3
'வேங்கை வீயா மென்சினை வீஉக’ - குறுந்: 247 : 5
'இனி', 'வீயா' என்பது 'அழியாத' 'இறவாத' என்னும் பொருள்களைத் தரும்
'நீங்குதல்', 'தவிர்தல்', 'ஒழிதல்', 'அழிதல்' - என்னும் பொருள்களும் தரும்.
‘வீயா யாணர் நின்வயி னோனே’ - பதிற்: 35:10; 36:1
‘வியா விழுப்புகழ்’ - அகம் : 135 : 1
‘வியா விழுமம் தரும்’ - குறள் : 284
‘வியாது, உடம்பொடு நின்ற உயிரும் இல்லை' - புறம்: 363:8
'வியாச் சிறப்பின் வேள்வி' - புறம்: 15:20
‘வியாது பரந்தநின் வசையில் வான் புகழே' - புறம் : 168 : 22
- எனவே, இவ்விடத்து 'வியாது' என்பதற்கு 'அழியாது' என்னும் பொருளே மிகப் பொருந்துவதாம் என்க.
- பின் சென்று அடும் : செய்தவனைத் தொடர்ந்து சென்று தாக்கும்.
அடும் - தாக்கும் .
- கொல்லும் என்பது அத்துணை பொருந்தாது.
- 'தாக்குதல்' அகவழியாக மனத்தாக்கத்தையும், புறவழியாக அரசுத் தண்டத்தையும் ஏற்படுத்தும்.
‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்’
- 297
- என்பது, அகத்தாக்கம்.
'கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல்' - 550