திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
143
‘ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்’
- 673
‘வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று’
- 955
‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்’
- 973
‘பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்’
- 975
‘ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்’
- 989
5) செல்வம் மிக்கிருந்த காலை செய்யப்பெறும் ஒப்புரவாண்மை அறத்தை விரும்பி மேற்கொள்ளும் தன்மையினார் பற்றி முன் மூன்று பாடல்களில் பேசியவர், அது குறைந்த காலத்தில் அத்தகையவர் எவ்வாறு நடந்துகொள்வர் என்று இதில் கூறுவதால், அவற்றின் பின்னர் இது வைத்தார்.
உகசு . நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
- 219
பொருள்கோள் முறை: இயல்பு'
பொழிப்புரை: நடுநிலையான பொதுமை நலம் கருதுபவன் வறுமையுற்றான் என்பது, அவன் பிறர்க்குச் செய்து வந்த பொதுநலக் கொடைகளைத் தன்னால் செய்ய இயலாமல் மனம் வருந்துகின்ற நிலையே.
சில விளக்கக் குறிப்புகள்:
1) நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல்: நடுநிலையான பொதுமைநலம் கருதுபவன் வறுமையுற்றான் என்பது :
நயனுடையான் :நடுநிலையான பொதுமை நலம் கருதுபவன்.
நல்கூர்ந்தான் ஆதல் : வறுமையுற்றான் என்று ஆவது
- அஃதாவது வறுமைநிலை அடைந்தான் என்பது.
- அவன் வறுமையுறுவது பிறர் வறுமையுறுவது போல் இல்லை. அதற்கு