திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
203
4) சென்ற குறளில் பசிக்கு உணவிடுவார் உயர்வைக் கூறியவர் இதில், அத்தகையவரின் அறப்பயனைக் கூறியதால், அதன்பின் இது வைக்கப் பெற்றது.
உஉஎ. பாத்துரண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
பொருள்கோள் முறை: இயல்பு
பொழிப்புரை: என்றும் தனக்குக் கிடைக்கும் உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணும் பண்பு தழுவியனைப் பசி என்னும் தீய பிணி அண்டுவதில்லை.
சில விளக்கக் குறிப்புகள்:
1) பாத்துஊண் மரீஇயவனை : என்றும் தனக்குக் கிடைக்கும் உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்து பண்பு தழுவியவனை. பாத்து ஊண் பகிரப் பெற்ற உணவு. உணவைப் பகுத்து உண்ணுதல்.
- ‘பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்’ - 322
- ‘பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்’
என்பார் ஆசிரியர்.
பகுத்து-பாத்து -இடைக்குறைந்து நீண்டது. பாத்து-பாத்தி - வரம்பிடப் பெற்ற நிலம்.
- “பழியஞ்சிப் பாத்துண் உடைத்தாயின் - 44
- ‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்’ -1107
- “பழியஞ்சிப் பாத்துண் உடைத்தாயின்
மரீஇயவனை: மருவியவனை, தழுவியவனை - பழகியவனை.
- பண்பு தழுவியவனை.
- பகுத்துண்ணுதல் ஒரு பண்பாதலின் 'பண்பு தழுவியவனை' எனவாயிற்று.
- பாத்துண்பான் ஏத்துண்பான் பாடு - ஏலாதி:44:4
- 'பஞ்சப் பொழுதில் பாத்துண்பான்....
- பாத்துண்பான் ஏத்துண்பான் பாடு
......................................