திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
81
தண்டனையாக என்ன கேடுகள் செய்யலாம் என்பது பற்றி அறம் எண்ணிப் பார்க்கும்.
சில விளக்கக் குறிப்புகள் :
1) இஃது ஒர் 'உருவக'ச் செய்யுள் (Metaphor).
இதில் முன்னைய உருவகங்களைப் போல, அறம் ஓர் உருவமாகவும், தெய்வமாகவும் உருவகிக்கப் பெற்றுள்ளது.
- இது போலும் உருவகங்களை பல நல்லுணர்வுகளுக்கும். வல்லுணர்வுகளுக்கும் ஆசிரியர் கையாண்டுள்ளது பற்றி முன்பே (77, 84, 130, 167, 168, 179) ஆகிய குறட்பா விளக்கங்களுள் கூறப் பெற்றுள்ளது.
‘அறத்'தை ஒரு தெய்வமாக உருவகித்துள்ளமை :
‘அறம் காயும்’ - (77)
‘அறம் பார்க்கும்’ - (130)
‘அறம் சூழும்’ - (204)
'செல்வ'த்தை ஒரு பெண் தெய்வமாக உருவகித்துள்ளமை :
‘செய்யாள் உறையும்’ - (84)
‘செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்’ - (167)
'சேரும் திரு’ - (179)
'நீங்கும் திரு’ - (519)
'தாமரையினாள்' - (617)
'திரு நீக்கப்பட்டார்'. - (920)
'சோம்பலை' 'வறுமை'யை - ஒரு தீத் தெய்வமாக உருவகித்துள்ளமை.
‘தவ்வையைக் காட்டிவிடும்’ - (167)
‘மடியுளாள் மாமுகடி’ - (617)
'நில'த்தை ஒரு பெண் தெய்வ்மாக உருவகித்துள்ளமை:
'நிலம்' என்னும் நல்லாள் - (1040)
'நாண'த்தை ஒரு பெண் தெய்வமாக உருவகித்துள்ளமை.
'நாண்' என்னும் நல்லாள்'. - (924)
‘சாவை' ஒரு கொடுந்தெய்வமாக உருவகித்துள்ளமை:
'கூற்றம் குதித்தலும் கைகூடும்' - (269)
‘உயிருண்ணும் கூற்று’ - (236)