திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
95
- அடுத்து, ஒருவனுக்கு இரண்டாவதாக அமையும் பகை உட்பகை
- உட்பகை என்பது, உள்ளத்துப் பகை வைத்துக் கொண்டே பழகுகின்ற நண்பர்கள், அல்லது நெருக்கமாகப் பழகி, ஏதோ ஒரு காரணமாக விலகியும் விலகாமலும் உள்ளவர்கள்.
- இவர்களிடத்தும் ஒருவன் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். என்னை?
‘அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு' - 382
‘மனம்மாணா உட்பகை’ - 884
‘உறல் முறையான் உட்பகை’ - 885
‘செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை’ - 887
‘மனத்தின் அமையாதவர்’ - 825
‘இனம்போன்று இனமல்லார் கேண்மை’ - 822
'உட்பகை அஞ்சித்தற் காக்க’ - 883
‘எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்'
'உட்பகை உள்ளதாம் கேடு’
- 889
- என்பார் ஆசிரியர்.
‘தன்மை இலாளர் பகை’ - இன்னா: 31 : 4
'நட்பின் நய நீர்மை நீங்கல்
குற்றம் தரூஉம் பகை’
- திரிகடு: 86:3-4
‘உட்பகை ஒருதிறம் பட்டென - புறம்:68:11
'நகையாய நண்பினார் நாரின்மை இன்னா’ - இன்னா:82
- என்பார், பிறரும்.
- இனி, ஒருவற்கு மூன்றாவதாக அமையும் பகையே புறப்பகை பெரும்பாலும் இதன் மிகுதியும், கேடும் கருதி இதனைப் பகை என்னும் பொதுப் பெயராலேயே வழங்குவர்.
- புறப்பகை வெளிப்படையாக இயங்கும். அதனால், அதனை அடையாளம் காணுவதும் எளிது.
- இப்புறப்பகை ஒருவற்குப் பல்வேறு கூறுகளான் அமைவது.
அவற்றுள் சில :
1) வழிவழி வருவது.
2) கடுமையான வாய்ச்சண்டையிடுவது.