திருக்குறள் விளக்கு 41.
அணிந்திருந்தார்கள். அதனால் ஏமாந்து போனேன். இம் மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரோ?
ஆண் குரல்: அம்மா, பெரும்பற்றப் புலியூராகிய தில்லையில் நின்று என்னை ஆண்டுகொண்ட சிவ பெருமானுக்குரிய மலையிலே உள்ள சிங்கத்தைப் போன்ற ஒரு கட்டிளங்காளையை நான் கண்டேன்.
செவிலி: கண்டீர்களா? பிறகு.?
ஆடவன் : அந்தக் கட்டிளங்காளைக்குப் பக்கத்தில்...
செவிலி : என்ன தயங்குகிறீர்கள்? சொல்லுங்கள்.
ஆடவன் : எனக்குத் தெரியாது. இதோ இவள் சொல்வாள்.-தூண்டா விளக்குப் போன்ற என் அன்பே, அம்மா சொல்வதைக் கேட்டாயா? என்ன கேட்கிறாள் தெரிகிறதா ?
(மாற்றம்)
குரல் அ; இதோடு பாட்டு முடிகிறது. பாவம்! செவிலி தன் மகள் போனாளா என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலோடு நின்றாள். அந்த ஆடவனே. அதைச் சொல்லவில்லை. தன் காதலியைச் சொல் லும்படி குறிப்பித்து விட்டான்.
குரல் ஆ: அப்படி என்றால் ?
குரல் அ: திருவள்ளுவர் சொல்வார்.
வேறு குரல்: (பாடுகிறது.)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் ஒன்றே ஆன்ற ஒழுக்கு."
1. குறள், 148.