பக்கம்:திருக்கோலம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன உறவு?

இந்த உலகில் பிறந்த உயிர்கள் இங்கும் நன்ருக வாழ வேண்டும். இந்தப் பிறவிக்குப் பின்னும் என்றும் மாருத இன்ப வாழ்வைப் பெறவேண்டும். எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்தால் இந்த இரண்டு வகைப் பயன்களையும் பெறலாம். நம்முடைய சமய நூல்கள் நமக்கு வகுத்துக் காட்டும் நெறிகள் இந்த இருவகை வாழ்வையும் பெறுவ தற்கு உதவுவன. . . . . . . . . . . . . . .

மனிதன் பெறவேண்டிய உறுதிப் பொருள்கள் நான்கு. அவற்றைப் புருஷார்த்தம் என்று வடமொழியில் சொல் வார்கள். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பவை. இவற்றில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் இந்த உலக வாழ்வில். பெறுவதற்குரியவை. வீடு இந்த வாழ்வுக்குப்பின் அடைவது. இறைவனே வழிபட்டு அவன் அருளேப் பெற்ருல் இந்த இருவகை வாழ்வும் நமக்குக் கிடைக்கும் என்று அருளாளர்கள் உறுதியாகச் சொல்லி யிருக்கிருர்கள். - -

'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்; எண்ணின் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலே??

என்பது திருஞானசம்பந்தப் பெருமானுடைய திருவாக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/34&oldid=577973" இலிருந்து மீள்விக்கப்பட்டது