பக்கம்:திருக்கோலம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் தண்ணளி 53

கூட்டுக; ஒருவரை என்பது நடுநிலை விளக்காக நின்றது, உடல் பொருள் ஆவி யாவும் சேர்ந்த தொகுதியை எனது என்று ஒருமையாற் சுட்டினர்; தொகுதி ஒருமை.என்று எண்ணி. இருப்பார்-அமைதியாக இருப்பவர் என்று பொருள் கொள்ளவேண்டும், சிலராகிய அந்த யாவரோடும் பிணங்கேன் என்று கூறினாலும் சேர்ந்திருப்பேன் என்பதே கருத்தாகக் கொள்க. ஒன்று-சிறிதும்; இங்கும் உம்மை தொக்கது. தண்ணளியே இவ்வளவுக்கும் காரணம் என்று பொருள் கொள்ள வேண்டும்.)

அன்னேயின் திருவருளே அவளே வணங்கவும், சாது சங்கத்தைப் பெறவும் துணைசெய்யும் என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 81-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/63&oldid=578002" இலிருந்து மீள்விக்கப்பட்டது