‘76 திருக்கோலம்
- தருண வாணிலா வீசுசடிலமோலி மாக ாளி: (தக்கயாகப்
பரணி, 107) என்பவற்ருலும் அறியலாம்.
சிவபெருமானுக்கு உள்ள இலக்கணங்களே எல்லாம் அம்பிகையினிடமும் காணலாம், சிவமும் சக்தியும் வேறல்லர் ஆகையில்ை.
அம்பிகையைத் தியானிக்கும்படி சொல்ல வந்த அபி ராமிபட்டர் எப்படித் தியானிக்க வேண்டும் என்பதைக் குறிப்பினுல் புலப்படுத்துகிரு.ர். வஞ்சகம் இல்லாமல் துய்மையை உடைய நெஞ்சோடு இருந்து தியானிக்க வேண்டும். அடியவர்களே, 'நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் (69) என்று இந்த ஆசிரியரே முன்பு குறிப்பிட்டுள் :ளார். 'நெஞ்சில் வஞ்சகரோ டிணங்கேன் (81) என்று சொன்னவர் இவர். வஞ்சகர் நெஞ்சில் அம்பிகை எழுந் தருளி நலம் புரிய மாட்டாள். .
வஞ்சகர் நெஞ்சு அடையாளே.
இவ்வாறு அம்பிகையின் இயல்பைச் சொல்லும் வாயி
லாக வஞ்சகம் இல்லாத நெஞ்சத்தோடு அவளே வழிபட
வேண்டும் என்ற அறிவுரையை மறைமுகமாகச் சொல் கிருர், . -
- அம்பிகையின் இடை மிக மென்மையானது; நுட்ப மான நூலேப் போன்றது. -
தயங்கும் நுண் நூல் இடையாள. அன்ன எம்பெருமானுடைய ஒருபாகத்தில் எழுந்தருளி யிருக்கிறவள்; அவனே என்றும் பிரியாமல் உறைபவள். எங்கள் பெம்மானிடையாளே. அம்பிகையை வழிபடுகிறவர்களுக்குச் சிவபெருமான
அயலாகப் பார்க்கும் எண்ணம் வராது. ஆதலின், எங்கள் பெம்மான்’ என்ருர், s'. ... ." . - . . . . . .