பக்கம்:திருக்கோலம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் அவள் காட்சி 83

வாணங்கள் ஐந்தும் காட்சி தருகின்றன; கரும்பு வில்லும் கூடத்தான். இவை அம்பிகை திருக்கரங்களில் ஏந்திய பொருள்கள். *

அவை மட்டுமா? திரிபுரசுந்தரியின் திருமேனி விளக்க மாகத் தெரிகிறது. தெரியாமல் ஒடுங்கியிருக்கும் சிற்றிடை யும் தெரிகிறது. அவளுடைய பெரிய தன பாரங்களைப் பார்க்கும்போது சிறிய இடை தெளிவாகத் தெரிகிறது. தனபாரங்களின்மேல் முத்துமாலேயும் தெரிகிறது. .

உள்ளே தியானிக்கும்போது தன் உருவைக் காட்டி யருளும் அன்னை அவருக்கு மன அமைதியையும் இன்பத்தை யும் தருகிருள். புறத்திலும் இந்தக் காட்சியைக் காட்டி, துணையாக இருந்து, எல்லா வகையான அல்லல்களையும் அவள் தீர்க்கிருள். என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்’ என்று மன நிறைவோடு அம்பிகையைக் குறிப்பிடுகிருர், .

பார்க்கும் திசைதொறும் பாசாங்

குசமும், பனிச்சிறைவண்டு. ஆர்க்கும் புதுமலர் ஐந்தும்,

கரும்பும், என் அல்லல்எல்லாம். தீர்க்கும் திரிபுரை யாள்திரு - மேனியும், சிற்றிடையும், வார்க்குங்குமமுலே யும்,முலே.

மேல்முத்து மாலேயுமே. (அடியேனுடைய இனைல்களையெல்லாம் போக்கு கின்ற திரிபுரசுந்தரியின் திருக்கையில் உள்ள பாசமும், அங்குசமும், குளிர்ச்சியையுடைய சிறகைப் பெற்ற வண்டுகள் முரலுகின்ற புது மலர்களாகிய ஐந்து அம்புகளும், கரும்பாகிய வில்லும், அவள் அழகிய மேனியும், சிறிய திரு - இடையும், கச்சையுடைய, குங்குமக் குழம்பு பூசிய நகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/93&oldid=578032" இலிருந்து மீள்விக்கப்பட்டது