பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

அண்மையில் வெளி வந்துள்ள திருக்கோவையார் ஒளி நெறியின் கட்டுரையாகும் இந்நூல். இந்நூலுக்குப் பிற்சேர்க்கை ஆக உள்ளது திருக்கோவையார் உரை நடைப்பகுதி. அது திருக்கோவையார் நூல் முழுமையும் அடங்க எழுதப்பட்டுள்ளது. அதினின்றும் திருக்கோவையார் ஒரு தலைவன் தலைவி உடைய இனியதொரு வாழ்க்கைக் கதை என்பது விளங்கும். படிக்க இனிப்பு உள்ளதாகும். அதைப் படித்து விட்டால், திருக் கோவையார் முழுதும் படித்ததாகும்.

ஒளி நெறியின் முகவுரையில் கூறியபடி, இறைவன். திருவருளாலும், கழக ஆட்சியாளராகிய திருவாளர் வ. சுப்பையா பிள்ளை அவர்களுடைய அன்பினாலும் இக்கட்டுரை வெளி வருகின்றது. ஆட்சியாளருக்குள்ள தமிழ்ப் பேரன்புக்கு, இந்நூல் வெளியீடு தக்கதொரு சான் ருகும். அவருக்கு என் பெரு நன்றி உரித்தாகும்.

எல்லாம் இறைவன் செயல்.

அன்பன், வ. சு. செ.