பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்கோவையார் ஒளிநெறக் கட்டுரை

திருவருட் பணியைத் தாம் ஒருவரே முடித்துத் தமிழுலகிற்கு வழங்கிய்து திருவருட் செயலேயாகும். பல துறைகளில் எத்தனையோ நூல்களைக் கழகம் வெளியிட்டிருப் பினும் திருமுறை ஒளிநெறி, ஒளிநெறிக் கட்டுரை நூல்களை வெளியிடும் பேற்றை அருளிய அம்மையம்பலவாணர் திருவடிகட்கு வணக்கஞ் செய்து வாழ்த்துகின்றோம்.

இவர்களைத் தவிர வேறு எவரைக் கொண்டும் இவ்வருட் பெருந்தொண்டைச் செய்ய முடியாதென்றே இவர்கள் வாழ்நாளை நீட்டித்துப் பணி செய்விக்கின்ருன் என்று சொன்னல் அது மிகையாகாது. இவற்றை நன்கு புரிந்து வருகின்றனர். வேரறோராற்றால் கூறப்புகின் கடவுளின் அதிட்டானப் பொருளாய் நம் பெரியார் காட்சியளிக்கின்றனர். அதிட்டான மென்பது கடவுள் முன்னின்றியைந்தியக்க அவ்வுயிர் அருந்தொழில் ஆற்றுவது அறிவின் அடையாளம் ஓங்காரம். அதனும் நம் சிவப் பெருந் தொண்டர் ஓங்கார வடிவமாய் நின்று உழைத் வருகின்றனர்.

இக் கட்டுரைக்கண் க. 'சிவபிராற் பகுதி' முதல் எ. 'மணிவாசகர் வரலாற்று நினைவுப் பகுதி முடிவாக ஏழு பெருந் தலைப்புகளும் ஒவ்வொன்றின் பாலும் பற்பல உட்டலைப்புக்களுங் காணப்படுகின்றன. இந்நூலிறுதிக் கண் திருக்கோவையார் உரைநடை எழுதிச் சேர்த் திருப்பது கற்பவர்க்கு நனி பயன் தரும். இவற்றின் வாயிலாகத் திருக்கோவையாரின் சிறப்பும், இதனைப் பாடும்படி பணித்துத் தன் திருக்கையால் எழுதிக்கொண்டருளிய இறைவன் அருளிப்பாடும் பிறவும் நன்கு புலகுைம்.

இச் சீரிய நூலினைச் செந்தமிழ் அன்பர்களும் செல்வர்களும் வாங்கியும் வாங்குவித்தும், ஒதியும் ஒது வித்தும் நற்பயன் எய்துவார்களாக.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்