பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) திருக்கோவையார் பாடிய வரலாறு 359 செவ்வந்திப் புராணம் தேனுாறும் வாசகங்கள் அறுநூறுந் திருக்கோவை நானுாறும் அமுதுாற மொழிந்தருளும் நாயகனை வானுாறும் கங்கை நிகர் மாணிக்க வாசகனை யானுாறு படாதவகை யிருபோதும் இறைஞ்சிடுவேன். திருகாகைக்காரோண புராணம் எழுதிடும் வேலை பூமேல் இருப்பவன் இயற்றப் போக்கி எழுதுதல் இல்லா நூல்சொற் றினிதமர் தருமா தேவை எழுதெழு தெனப்பல் பாச்சொற் றியைதரப் பெயரும் ஈற்றில் எழுதிடச் செய்த கோமான் இணையடி முடிமேல் வைப்பாம். திருப்பனைசைப் புராணம் ஏத மார்பவத் தின்னல் களைந்திடச் சித வார் பொழிற் றில்லையுண் மேவிய பூத நாதர்க்குக் கோவை புனைந்திடும் வாத ஆரன் மலர்ப்பதந் தாழுவாம். புள்ளிருக்குவேளுர்ப் புராணம் வழுதிமனு நெறிசெலுத்து மந்திரியாய்ப் புரவிகொள்ள வந்த செம்பொன் முழுதும்வளர் திருப்பணிசெய் திலகுதிரு வாசகமும் மொழிந்து பாரோர் தொழுதுசிர மேற்கொண்டு துதிப்பநிறை கோவையார்த் துறைகள் யாவும் பழுதுபடா தெடுத்துரைத்த வாதவூ ரன்பர்பதம் பணிதல் செய்வாம். மயூரகிரிப் புராணம் கன்னலின்சா றடுபாகு தன்னின்முறித் தேடுத்திடும் அக காரம் போலப் o பன்னியிடும் ஆரியத்தில் தென்மொழிஇன் புளததனற். பாடு கென்ன r அந்நிலையே கோவைதிரு வாசகத்தால் அரன்தன்னை . ஆன்பிற் பாடும் தந்நிகரில் மீாணிக்க வாசகளுர் திருவடிஎம் தலைமேற் கொள்வாம்.