பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


புறத்திலும் பாறையைக் குடைந்தெடுத்த இரு குகைகள் காணப்படுகின்றன. ஸிம்ஹவிஷ்ணு, மஹேந்திரவர்மன் முதலிய பல்லவ மன்னர்கள் எழுதி வைத்திருக்கும் சிலா சாஸனங்கள் இக்குகைகளில் இருக்கின்றன.

மேலசாலுக்கியர்கள் சோழபல்லவர்களை வென்று காவேரியைத் தாண்டிச் சேரபாண்டியர் நாடுகளுக்குச் சென்றனர். மண்ணைக்குடியில் பாண்டியரைத் தோற்கடித்த பல்லவ நந்திவர்மன் 755 முதல் 769 வரையில் ஆண்ட விக்ரமாதித்ய சாலுக்கியனால் தோற்கடிக்கப்பட்டான். சுமார் நூறு வருஷங்களுக்குப்பின் விஜய நிருபதுங்க விக்ரம வர்ம பல்லவன் சோழநாட்டையாண்டதாக லால்குடியிலும் தஞ்சாவூரிலும் சாஸனங்கள் கிடைத்திருக்கின்றன.

பல்லவராண்ட காலத்தில் தென்னாட்டில் பௌத்த ஜைன மதங்கள் பரவின. சில பல்லவர்களும் சைவத்தை விட்டு பௌத்த ஜைன மதங்களைக் கைப்பற்றினார்கள். பௌத்த ஜைனர்களுக்கு திருவள்ளரை மலையில் ஒரு குகையும் பழயசங்கடத்தில் (பழய ஜயங்கொண்ட சோழபுரம்) ஒரு மண்டபமும் குளமும் பல்லவர்களால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன.

திருஞானஸம்பந்தர் :-திரும்பவும் தென்னாட்டில் சைவத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு இவர் பிறந்தார். தஞ்சாவூர் ஜில்லாவில் சீர்காழி நகரத்தில் அந்தணர் குலத்துதித்து இளம்பிராயத்திலேயே ஞானமடைந்து சஞ்சாரம் செய்யத் தொடங்கினார். மதுரையில் பாண்டிய மன்னனைச் சைவத்துக்குத் திருப்பி சமணர்களில் அனேகரைக் கழுவிலேற்றுவித்தார். காஞ்சீபுரத்திற்குச்சென்று பல்லவமன்னனைத் திருப்பயத்தனித்ததில் முடியாமல் போனதால் சோழரின் உதவியைக்கொண்டு அவனை வென்றார். காலக்