மஹமதியர் படையெடுப்பு.
19
8-ம் அதிகாரம்.
மஹமதியர் படையெடுப்பு.
13-ம் நூற்றாண்டில் (1232) டெல்லி மஹமதிய சக்ரவர்த்தியின் ஸேனைத்தலைவருள் ஒருவன் மாலிக்காபூர் என்பான் தென்னாட்டின் மேல் படையெடுத்து ஹாய்ஸால ராஜ்யத்தை யழித்தான். அவன் ராமேசுவரம்வரை செல்ல வில்லையானாலும் 1249 முதல் 1287 வரை மஹமதிய அதிகாரிகள் திருச்சினாப்பள்ளி மதுரை ஜில்லாக்களில் இருந்தனரென நிச்சயிக்கலாம். இக்காலத்தில்தான் (1235) ரவிவர்மச்சேரன் ஸ்ரீரங்கத்திற்கும் காஞ்சீபுரத்திற்கும் சென்றான். சோழபாண்டியர் அழிந்து போகவில்லையென்றாலும் அவரைப்பற்றியொன்றும் தெரியவில்லையாதலால் அவர் ஸ்வாதந்திரியத்தை இழந்து விட்டாரென்று தோன்றுகிறது.
தக்ஷித்தில் ஏற்பட்ட மஹமதிய ராஜ்யங்களுள் முதன்மையாயிருந்தது கோல்கொண்டா. இந்த ராஜ்யத்தில் பத்திரகிரி மலையில் புராதனமாய் ஏற்பட்ட ஸ்ரீராமர் ஆலயம் ஒன்று உண்டு. பத்திரகிரியில் கோபன்னா என்றொரு ராமபக்தரிருந்தார். இவர் தினந்தோறும் எழைகளுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். இவரது தர்மத்தின் பலனாக இறந்து போன இவருடைய 5 வயது குழந்தை உயிர்த்தெழுந்தது. கோல்கொண்டாவின் மஹமதிய அதிகாரி கோபன்னாவிடம் ப்ரீதிகொண்டு அவரைப் பத்ராசலம் தாசில்தாராக நியமித்தான். ஸர்க்கார் கிஸ்தி 6 லக்ஷம் ரூபாய் வரையில் பாக்கி வசூலாகவேண்டியிருந்த்து. பணத்தை பாக்கியில்லாமல் வசூல் செய்து அதைக் கொண்டு இடிந்து கிடந்த ஸ்ரீராமர் ஆலயத்தை கோபன்னா புதுப்பித்தார். அதிகாரி தன் பணத்திற்காக கோபன்னாவைச் சிறையிலிட்டான். அன்று இரவே ஸ்ரீராமர்