#44 திருத்தலப்பயணம் சம்பந்தர் குணக்கும்.தென் திசைக்கண்ணும், குடபாலும், வடபாலும் கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும் வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்குஎன்றும் பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. <sfilii Bif தாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற பாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும் பேதனாய்த் தோன்றி னானைப்பெருவேளூர் பேணினானை. ஒதநா உடைய னாகி உரைக்குமாறு உரைக்கின் றேனே. 156. தலையாலங்காடு ஆடவல்லநாதர்-திருமடந்தை அப்பர் : 1. வழிபட்டநாள் : 2-3-56, 13-3-85. குடவாயிலுக்குக் கிழக்கு 5 மைல். இதற்குக் கிழக்கு 3 மைவில் பெருவேளூர் இருக்கிறது. "தலையாலங் காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே" என்று அப்பர் சுவாமி உருகிப்பாடுவார். கோவிலுக்குள் சென்று பார்த்தால் கோவில் காணத்தக்க நிலையில் இல்லை. տ#ւյւո* சிவனாகி, திசைமுகனாய். திருமால் ஆகி. செழுஞ்சுடராய், தியாகி. நீரும் ஆகி. புவனாகி. புவனங்கள் அனைத்தும் ஆகி. பொன்னாகி. மணியாகி. முத்தும் ஆகி. பவனாகி, பவனங்கள் அனைத்தும் ஆகி. பகஏறித் திரிவான் ஒர் பவனாய் நின்ற தவனாய தலையாலங் காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.
பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/179
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை