பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாடு 宠艺3 இறைவன் இருமணத்திற்குக் காரணமாகச் சுந்தரமூர்த்திகளை ஒருமணத்தில் தடுத்தாட்கொண்டது இத்தலத்தில்தான் இத்தலத்துக்கு அணித்தே "மனம் தவிர்ந்த புத்துர்" என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்குத்தான் சிவபெருமான் ஒலை காட்டி மணத்தைத் தவிர்த்தார் என்பர். திருவெண்ணெய் நல்லூரிலுள்ள கோயிலுக்கு அருள்துறை என்று பெயர். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் முதல் தேவாரம் எழுந்தது இத்தலத்திலேயே. சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவர் இத்தலத்தில் வாழ்ந்தார். "வெண்ணெய் மேவும் மெய்கண்ட தேவன்" என அருள்நந்திசிவம் போற்றுவார். இத்தலத்தில் மெய்கண்ட தேவருக்கு ஒரு தனிக் கோயில் இருக்கிறது. கம்பர்பிரானை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த திருவெண்ணெய் நல்லூர் இஃது அன்று என்பர் ஆராய்ச்சிக்காரர். சுந்தரர் பித்தா'பிறை சூடீlபெரு மானே!அரு ளாளா எத்தான்மற வாதேதினைக் கின்றேன்மனத்து உன்னை. வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள் அத்தா!உனக்கு ஆளாய்இனி அல்லேன் எனல் ஆமே. சேக்கிழார் சொல்லார்தமிழ் இசைபாடிய தொண்டன்தனை, "இன்னும் பல்லாறுல கினில்நம்புகழ் பாடு"என்றுஉறு பரிவில் நல்லார்வெண்ணெய் நல்லூர்.அருள் துறைமேவிய நம்பன் எல்லாஉல குய்யப்புரம் எய்தான்.அருள் செய்தான். வில்லிபுத்துளர் ஆழ்வார் ஐஆனனன் இயல்வாணனை அடிமைக்கொள மெய்யே பொய்ஆவணம் எழுதும்பதி பொற்போடு வணங்கா மெய்ஆகம அதிகைத்திரு வீரட்டமும் நேமிக் கையாளன்.அ கிந்திரபுர மும்கண்டுகை தொழுதான்.