சோழநாடு 285 நம்மாழ்வார் 'முடிவுஇவள் தனக்குஒன்று அறிகிலேன்' என்னும் 'மூவுலகு ஆளியே' என்னும் 'கடிகமழ் கொன்றைச் சடையனே!' என்னும் நான்முகக் கடவுளே!' என்னும் வடிவுடை வானோர் தலைவனே!' என்னும் 'வண்திரு அரங்கனே' என்னும் அடிஅடை யாதாள் போல்இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே. கம்பர் பிணிஅரங்க வரினை அகலப் பெருங்காலம் தவம்பேணி மணிஅரங்க நெடுமுடியாய்! மலர் அயனை வழிபட்டுப் பணிஅரங்கப் பெரும்பாயல் பரஞ்சுடரை யாம்காண அணிஅரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார். வில்லிபுத்துார் ஆழ்வார் இலங்காபுரி முன்செற்றவன் இருபோதும் வணங்க, துலங்குஆடுஅரவு அணைமேல்அறி. துயில்கொண்டவர் பொன்தாள் பொலம்காவிரி இருபாலும் வரபூதல மங்கைக்கு அலங்காரம் அளிக்கும்.தென் அரங்கத்திடை தொழுதான். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முருகன்உறை குறிஞ்சித்தேன் முல்லை பாய முல்லைநிலத் தயிர்.பால்,நெய் மருதத்து ஒட. மருதநிலக் கொழும்பாகு நெய்தல் தேங்க, வருபுனல்கா விரிசூழ்ந்த வளத்தைப் பாட 'கருமணியே! மரகதமே! முத்தே! பொன்னே! கண்மணியே! ஆர்உயிரே கனியே! தேனே! அருள்புரிவாய்' என்றவர்தம் அகத்துள் வைகும் அணிஅரங்க மாளிகையார் ஆடிர் ஊசல்!
பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/312
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை