பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 291 இருக்கும் மேலைத் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து. அங்கிருந்து மேற்கே 5 மைல் துரம் சென்றால் இத்தலத்தை யடையலாம். மேலைத் திருக்காட்டுப்பள்ளிக்குக்கண்டியூரி னின்றும் ஓர் சாலை இருக்கிறது. கண்டியூரினின்றும் 11 கல் அளவு. கிடந்த திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம். பெரியாழ்வர் கொண்டல்வண் ணா!இங்கே போத ராயே! கோயிற்பிள் ளாய்!இங்கே போத ராயே! தெண்டிரை சூழ்திருப் பேர்க்கி டந்த திருதார ணா'இங்கே போத ராயே! உண்டுவந் தேன்.அம்மம் என்று சொல்லி ஒடி அகம்புக ஆய்ச்சி தானும், கண்டுஎதி ர்ேசென்றுஎ டுத்துக் கொள்ளக் கண்ணபி ரான்கற்ற கல்வி தானே. திருமழிசையாழ்வார் (அன்பில் தலப்பாடல் பார்க்கத் திருமங்கையாழ்வார் வெண்ணெய்தான் அமுது செய்ய வெகுண்டுமத்து ஆய்ச்சி ஒச்சி. கண்ணியார் குறுங் கயிற்றால் கட்டவெட் டென்றுஇ ருந்தான்; திண்னமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள். வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந்து உய்ந்த வாறே! நம்மாழ்வார் திருப்பேர் நகரான் திருமால் இருஞ்சோலைப் பொருப்பே உறைகின் றபிரான் இன்றுவந்து 'இருப்பேன்"என்று என்நெஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்றுஅமுதம் உண்டு களித்தேனே,