சோழநாடு 341 மலகஞ் சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே! என்கண் மணியே!என் வருத்தம் தவிர்க்க வரும்குருவாம் வடிவே! ஞான மணிவிளக்கே! சலகந் தரம்போல் கருணைபொழி தடங்கண் திருவே! கண்ணமங்கைத் தாயே! சரணம் சரணம்.இது தருணம் கருணை தருவாயே. 28. கவித்தலம் கசேந்திரவரதர்-ரமாமணிவல்லி வழிபட்டநாள் : 29-1-57, 3-1-66. திருமழிசையாழ்வார் : ! பாபநாசம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே இரண்டு கல் தொலைவு. கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். திருமழிசையாழ்வார் கூற்றமும் சாரா கொடுவினையும் சாராதி மாற்றமும் சாரா வகையறிந்தேன்-ஆற்றங் கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கம் மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு. 29. திருவெள்ளியங்குடி கோலவில்இராமன்-மரகதவல்லி வழிபட்டநாள் : 23-5-57, 14-1-66 திருமங்கையாழ்வார் : 1.0 திருவிடைமருதுாரிலிருந்து 5 கல் தொலைவு. கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம்.
பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/338
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை