பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 317 திருமங்கையாழ்வார் யாவருமாய் யாவையுமாய் எழில்வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்திஅமர்ந்து உறையும்இடம், மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கைத் தேவரும்சென்று இறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே. 37. திருமணிக்கூடம் மணிக்கூடநாயகன்-திருமாமகள் வழிபட்டநாள் : 7-8-57, 14-10-65 திருமங்கையாழ்வார் : 1.0 திருநாங்கூருக்குக் கிழக்கே ஒரு கல் தொலைவிலும், காவளம் பாடிக்குத் தெற்கே மூன்று கல் தொலைவிலும் இருக்கின்றது. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் கருமகள் இலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து, தன்மேல் வரும்அவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த எந்தை.