இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
318 திருத்தலப்பயணம் பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவுஇ லாத திருமகள் மருவு நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே. 38. காவளம்பாடி கோபாலகிருஷ்ணன்-மடவரல்மங்கை வழிபட்டநாள் : 7-8-57, 14-10-65 திருமங்கையாழ்வார் : 1.0 திருநகரியிலிருந்து தெற்கே திருவெண்காடு செல்லும் சாலையில் ஒன்றரைக் கல் தொலைவிலிருக்கின்றது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் சந்தமாய், சமயம் ஆகி, சமயஐம் பூதம் ஆகி, அந்தமாய் ஆதி ஆகி, அருமறை அவையும் ஆனாய், மந்தமார் பொழில்கள் தோறும் மடமயில் ஆலும் நாங்கைக் கந்தமார் காவ ளம்தண் பாடியாய்! களைகண் நீயே.