பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 திருத்தலப்பயணம் பின்னைப்பெருமான் ஐயங்கார் மாண்டு.பிறக் கும்துயர்போய் வைகுந்தம் புக்கவரும் மீண்டுதொழக் காதலிக்கும் வேங்கடமே-பாண்டுமகன் ஏறுஇரதப் பாகனார் ஏத்தும்.அடி பார்தாவில் ஊறுஇரதப் பாகுஅனார் ஊர். தனிப்பாடல் கூன்கொண்டு சென்றவன் கூன்திமிர்ந்து ஒட குகுடன்கொம்பில் தேன்என்று காட்ட முடவன்.அத் தேனை எடுக்க அயல் தான்நின்ற ஊமை தனக்குஎன்று கேட்க, தருவன்வரம் வான்நின்ற சோலை வடவேங் -கடமேய மாதவனே. 97. சிங்கவேள்.குன்றம் (அகோபிலம்) நரசிம்மன்-லட்சுமிநாச்சியார் வழிபட்டதான் : 17-11-64, 31-1-85. திருமங்கையாழ்வார் : 16 நந்தியால்-கடப்பை நெடுஞ்சாலையில், நந்தியாலிலிருந்து 25வது மைலில் அல்லகாடா என்ற ஊரிலிருந்து இடது கைப்பக்கம் திரும்பி. 14 மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். அகோபிலம் ஓர் மலைப்பகுதி, அடிவாரத்தில் ஒர் கோவில் இருக்கின்றது. மொத்தம் அகோபிலதில் ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் இருக்கின்றனர்.