பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலவணக்கம் கோளூர் மாநிதிக் குழகா போற்றி சிவர மங்கைத் தெய்வமால் போற்றி குறுங்குடிக் கோமளக் கொழுந்தே போற்றி அனந்தையில் பள்ளிகொள் அரங்கா போற்றி வண்பரி சாரமா மாயவ போற்றி 50 காட்கரை மேவிய கருங்கடல் போற்றி மூழிக் களத்து.நில் முகுந்தா போற்றி புலியூர் நின்ற புங்கவ போற்றி செங்குன்று ஊர் உறை செல்வமே போற்றி நாவாய் இருந்த நாரணா போற்றி §§ வல்லவாழ் தில்,மது சூதனா போற்றி வண்வண் டூர்உறை மாதவ போற்றி வாட்டாற்றுக் கிடந்த வள்ளலே போற்றி வித்துவக் கோட்டு வேந்தே போற்றி கடித்தான நாரணக் கார்முகில் போற்றி 70 ஆறன் விளைக்குறள் அப்பனே போற்றி அயிந்திர புரத்துஉறை அரியே போற்றி கோவிலில் பேர்உருக் கொண்டாய் போற்றி அத்தியூர் வரத அரசே போற்றி அட்ட புயகரத்து அம்மான் போற்றி 75 திருத்தண் காவிளக்கு ஒளியாய் போற்றி வேளுக்கை வேந்ததின் மெல்லடி போற்றி பாடகப் பாண்டவத் தூதா போற்றி நீரகம் நின்ற நெடுமால் போற்றி நிலாத்திங்கள் துண்ட, நின்மல போற்றி 80 ஊரகத்து உலகினை அளந்தாய் போற்றி வெஃகாக் கிடந்த மேலோய் போற்றி காரகக் கருணைக் கடலே போற்றி கார்வானக் கள்வlநின் கழல்இணை போற்றி கள்வனூர் வராகப் பெருமாள் போற்றி 85 445