1.02
28.
24.
25.
26.
27.
28.
29.
30.
ராசி
'உலகம் அளந்தாய்! தென்னிலங்கை செற்றாய்; சகடம் உதைத்தாய்; கன்று குணிலாக எறிந்தாய், குன்றைக் குடையாக எடுத்தாய்; சென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல்போற்றி; -24
கஞ்சன் வயிற்றில் நெருபென்ன நின்ற நெடுமாலே! -25
மாலே மணிவண்ணா ’’
- ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்' -26
கூடாரைவெல்லும் சீர் கோவிந்தா' -27
'குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா! இறைவா நீ தாராய் பறை. -28
'உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்; இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண்
கோவிந்தா! உனக்கே யாம் ஆட் செய்வோம்’ ’-29 வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைச் சென்று இறைஞ்சி செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர். -30
ஒவ்வொரு பாட்டிலும் இறைவன் பெயரும், புகழும், செயலும், சிறப்பும் கூறப்படுதல் காண்க. எனவே இது நற்பாமாலை என்ற கருத்து வலிவு பெறுகிறது.
4. பொழுது விடிந்தது துயில் எழுக எனல்
பொழுது விடிந்தது எழுக என்று கூறும் செய்தி மிக்க இடம் பெற்றுள்ளது.
1.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்' (1)