இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18 亦r宇
芷8。
19.
30.
உம்பர் கோமானே உறங்காது எழுக! பலதேவா! நீயும் உன் தம்பியும் உறங்காமல் துயில் எழுக.
நந்த கோபாலன் மருமகளே!
நப்பின்னாய்! கடை பிறப்பாய்; பொழுது விடிந்துவிட்டது;
கோழியும் கூவுகிறது; மாதவிப்பந்தல் மேல் குயிலினங்களும் கூவுகின்றன;
உன் கணவனின் புகழை யாம் பாட நீ வந்து கதவைத் திறப்பாய்;
யாம் மகிழ்வு அடைவோம்.
நப்பின்னையை அனைத்துக் கொண்டு
அவளைப் பிரிய மனமில்லாமல் கண்ணா நீ உறங்குகிறாய்!
மைவிழியாளே! நீயும் அவனை எழவிடமாட்டாய் ! உன்னால்
பிரிந்து இகுக்க இயலவில்லை. இது நல்லது அல்ல; நியாயமாகப்
படவில்லை; அவனைத் துயில் எழுப்புக.
விமலா! நீ துயில் எழுக;
நப்பின்னை நங்காய்! நீயும் துயில் எழு; உக்கமும் ஒளித்தட்டும் தந்து உன்
மணாளனை எழுப்பி எங்களிடம் அனுப்புக;
எங்களை நீராடச் செய்து மகிழவை;