திருப்பாவை 61
"வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன்
வாயறிதும்' 'வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக' 'ஒல்லை நீ போதாய்; உனக்கென்ன வேறுடைமை' 'எல்லாரும் போந்தாரோ?' 'போந்தார்;
போந்தெண்ணிக் கொள்; வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.”
பதவுரை
எல்லே இளங்கிளியே-ஏடி இளங்கிளி போன்றவளே! இன்னம் உறங்குதியோ-பொழுது விடிந்தும் இன்னுமா உறங்குகிறாய்!
சில்லென்று அழையேன்மின்-தூக்கத்தைக் கெடுக் காதீர்,
நங்கைமீர் போதருகிறேன்-தோழியர்களே! இதோ விரைவில் வந்து விடுகிறேன்.
வல்லை-பேச்சில் வல்லவள் நீ
உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்-முன்பே உன் பேச்சு பற்றி எங்களுக்குத் தெரியும்.
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக-கெட்டிக் காரர்கள் நீங்களே, நானேதான் யாராவது இருக்கட்டும்.
ஒல்லை நீ போதாய்-விரைவில் நீ புறப்படுக
உனக்கு என்ன வேறு உடைமை?-நீ மட்டும் எம்மோடு கலக்காமல் என்ன தனியாக நடந்து கொள்கிறாய்?
எல்லாரும் போந்தாரோ-எல்லாரும் புறப்பட்டு விட் டன ரா?