திருப்பாவை 75
நீராட்டு-நீராடச் செய்க;-பிறவினை; நீராடுதலே பாவை நோன்பின் அடிப்படை, அதற்குக்
கண்ணனிடம் பறை கேட்பதோடு அவ்விழாவிற்கு உக்கம்
(விசிறி) , தட்டொளி (கண்ணாடி) இவற்றையும் பெறவிழை
கின்றனர் என்பதாம்.
அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! செப்பம் உடையாய்! திறல் உடையாய்! விமலா ! இவை
இறைவனைப் பற்றிய விளிகள். பாமாலைப் பகுதி.
21 ஏற்ற கலங்கள் (போற்றி வந்தோம் எனல்)
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்: ஊற்றமுடை யாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்: மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் னடிபணியுமா போலே போற்றியாம் வநதோம். புகழ்ந்தேலோ
ரெம்பாவாய்.
பதவுரை
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப-தாங்கிய பாத் திரங்கள் நிறைந்து வழியும்படி மிகுதியாக அளிக்கும். வள்ளல் பெரும் பசுக்கள்-மிக்க வள்ளன்மை மிக்க வள மான பசுக்களை, ஆற்றப் படைத்தான் மகனே-மிகுதியாகப் படைத்த
வனின் திருக்குமரனே! அறிவுறாய்-விழித்து எழுக;