திருப்பாவை 87
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோலவிளக்கே! கொடியே! விதானமே! ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.
பதவுரை
மாலே! மணிவண்ணா-விளிகள்; மார்கழி நீராடுவான்-மார்கழி மாதம் நீராடுவதற்கு, மேலையார் செய்வனகள்-மேன்மை பொருந்திய அடியவர்கள் செய்யும் செயல்களை ஒட்டி
வேண்டுவன கேட்டியேல்-எமக்ரு என்ன தேவை என்று கேட்பாயானால்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே-பால் நிறத்தை உடைய உன் பாஞ்ச சன்னியம் என்ற
வெண்சங்கு
போல்வன சங்கங்கள்-போன்ற பல சங்குகளும், போய்ப்பாடு உடையனவே-சென்று எங்கும் ஒலிக்கும் பெருமை உடையனவாகிய
சாலப் பெரும் பறை யே--மிக்க பெரிய பறைகளும், பல்லாண்டு இசைப் பாரே-பல்லாண்டு பாடக் கூடிய
இசை வல்லவர்களும்,
கோல விளக்கே-அழகிய திருவிளக்குகளும், கொடியே-கொடிகளும், விதானமே-வெய்யில் தடுக்கும் மேல் கூரைச் சிலை
களும்; ஆலின் இலையாய்-பிரளய காலத்தில் ஆலிலையின்மீது
துயில் கொள்பவனே? அருள்-தந்து அருள்வாயாக.