திருப்பாவை 89
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை .
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா-பகைவரை வெல்
லும் சிறப்பு உடைய கோவிந்தா!
உன்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம் சன்மானம்-உன்னைப்
பெறும் பாடிப் பறையை ஏற்றுக்கொண்டு அதற்கு மேலும் யாம் பெறும் பரிசுப் பொருள்கள்
நாடு புகழும் பரிசினால்-நாட்டு மாந்தர் புகழும் வகை யினால்
நன்றாக-மிகுதியாக.
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே என்று அனைய பல்கலனும்-இங்குக் கூறப்படும் பல அணிகலன்களையும்
யாம் அணிவோம்-யாம் அணிந்து கொள்வோம்;
ஆடை உடுப்போம் - புதிய ஆடைகளை உடுத்திக்
கொள்வோம்;
அதன்பின்னே பால் சோறு-அதன் பிறகு பால் சோறு (அதனை)
மூட நெய் பெய்து-அச்சோற்றினை மூடும் அளவுக்கு நெய் பெய்து,
முழங்கை வழிவார-முழங்கைவழி வடிய. கூடியிருந்து குளிர்ந்து-யாம் கூட்டமாக இருந்து உண்டு மகிழ்ச்சி அடைவோம்.
தி-7