பக்கம்:திருப்புமுனை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


“இதையெல்லாம்விட சுவையான சம்பவம் ஒண்னு அங்கே நடந்தது உங்களுக்குத் தெரியுமா?” கண்ணன் கேள்வி அவன் நண்பர்களி டையே ஆர்வத்தைத் தூண்டியது. அவன் சொல்லப் போகும் விஷயத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டார்கள். தங்கள் காது களைத் தீட்டிக் கொண்டு அவன் வாய் அசைவையே உற்று நோக்கினார்கள்.

“என்ன அது?” கண்ணாயிரம் முந்திக் கொண்டு கேட்டான்.

“நம்மைப் போல இனியன் விருந்துக்கு வந்தும் விருந்து சாப்பிடலேடா.” கண்ணன் பூடகமாகச் சொல்லி முடித்தான்.

“ஏன்’டா? ஒருவேளை ஆசிரியருக்குப் பரிஞ்சு கோவிச்சுக்கிட்டு போயிட்டானோ?” தன் அனுமானத்தை வெளிப்படுத்தினான் தங்கதுரை.

“அதெல்லாம் இல்லை.” தங்கதுரை அனுமானத்தை நிராகரித்தான் கண்ணன்.

“பின்னே? என்ன’ன்னு சொல்லு'டா” கண்ணாயிரம் பொறுமை இழந்தவனாகக் கண்ணனைத் துரிதப்படுத்தினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/31&oldid=489780" இலிருந்து மீள்விக்கப்பட்டது