பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 பூவை. எஸ். ஆறுமுகம்



அறிந்துகொள்ள வேண்டும்' என்று சங்கற்பம் எடுத்திருந்த அவர், வாளிப்பான வாய்ப்புக்காகக் காத்திருந்தார். பூரீமான் கோதண்டபாணி என்று பொதுப்படையாகக் குறித்திருந்தது அவருக்கு வேற்றுமையாகப்பட்டது.

வாணியின் டைரியை எடுப்பதற்காக, எழுந்து பீரோவை நாடி நடந்தார். வாணியின் டைரியைக் காணோம். அதற்குப் பதிலாக, வேறொரு டைரி தென் பட்டது.

ஏதோ ஒரு பக்கம் காற்றில் பறந்தது. மனப்புரவியும் பறந்தது.

குதிரைக்குக் கடிவாளம் உண்டு; மனத்திற்கு ஏது?

கறுப்புக் கொள்கையில் தட்டுக் கெட்டுத் தடுமாறி, நின்ற சமயத்தில், பெற்றவரின் தாய்நாட்டுப் பாசத்தையும், அன்னையின் பெற்ற பாசத்தையும் மதிக்காமல், 'கெட்டும் பட்டணம் சேர்' என்ற முன்மொழியைத் தொடர்ந்து சென்னை வந்தடைந்து, கடைசியில் அமெச்சூர் நாடகக் குழு ஒன்றிற்காகக் கதை வசனம் பாடல் எழுதிக் கொடுத்த நாட்களிலே, நாயகியாக நடித்தவளின் நாயகனாக 'வாழ்ந்து கெட்ட' சில நாட்களின் அவலப் பிழைப்பை அவர் இத்துணை நாட்களாக மறந்துதான் போனார். ஆனால் அவற்றை மறைக்க ஒப்பவில்லை! அந்த நாடக்காரி நிரஜாவை விரட்டிவிட்டு இப்பொழுதும் வாணிதான் அவரது உள்ளத்து மேடையில் தோன்றினாள். மீண்டும் அவர் மனம் அடித்துக் கொண்டது. 'நான் என் வாணிக்குத் துரோகம் செய்து விட்டேனோ? இல்லை, இல்லவே இல்லை! நான் புது வழியில் திரும்பி எத்தனையோ வருஷங்கள் உருண்டு விட்டனவே'. அதே நிமிஷத்தில் தம்மையும் அந்நடிகையையும் பிணைத்துக் 'கன்னா பின்னா' வென்று எழுதித் தீர்த்த 'மஞ்சள் பத்திரி