பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 17



ஆனால், முடிகின்றதா?

மனம் பறக்கிறது!

மனிதனால் பறக்க முடிகிறதா?...

ஊரிலிருந்து யாரோ பெரியவர் வந்திருப்பதாகச் செய்தி சொன்னான் அப்பாஸ்.

வந்தவர், குடும்ப நண்பர். பெயர், கோதண்டபாணி. அவர் சொன்னார்: "தம்பி, உங்க அம்மாவுக்குக் கபவாத ஜுரம் வந்திருக்குது. என் மகள் வாணிதானப்பா கிட்டத்திலே இருந்து கவனிச்சுக்கிட்டு இருக்குது. உன்னைக் கையோடு அழைச்சுக்கிட்டுப் போகத்தான் வந்தேன். இப்பத்தான் எக்ஸ்பிரஸ் பஸ்ஸிலே வந்தேன். புறப்படு. வழியிலே ஆகாரம் பார்த்துக்கிடலாம்!"

பாசத்தின் அலைக்குமிழ் வெடித்தது!

அந்த அறையின் வெளிக் கதவில் பொருத்தப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் 'ஞானசீலன் பி.ஏ.வெளியே' என்ற அறிவிப்பு இருந்தது.

3. கள்ள விழிப் பார்வை !

ராஜராஜ சோழனின் அழியாப் புகழுக்கு அழியாச் சின்னமென நிமிர்ந்து நின்ற வண்ணம் இருக்கும் அந்தப் பெரிய கோயிலைப் பார்த்துக் கைதொழுதார் ஞானசீலன். 'பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைப்பது போல..' என்பார்கள். வாஸ்தவந்தான். 'சோழப் பேரரசின் ஜீவ ஒளியைப் பற்றிப் பாப்புனைய நான் கவிஞனாகப் பிறந்திருக்க வேண்டும். தப்பி விட்டேன். இப்போதைக்கு நான் ஒரு கதாசிரியன். கட்டிய வீட்டுக்குப் பழுது சொல்லாமல், காட்டிய திறனுக்குக் கைகூப்பு

தி.சொதி-2