பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

. மூப்பனுர் முறுக்கிப் படர்ந்த மீசையுடன் தன் நேருக்கு நேர் நின்று முழங்குவது போலிருந்தது செவந் திக்கு. அவள் உடல் நடுங்கியது.

தாலி!” அவளுக்குத் துடிப்பே உயிரை விட்டுப் பிரிந்தது போலிருந்தது. - அந்தத் தாலிதானே மாடனேயும் செவ்வந்தியையும் கணவன் மனைவியாக ஆக்கி முடிச்சுப் போட்டது. அதற்கு ஆதாரமாகக் கைகொடுத்து உதவிய அந்தச் சம்பவத்தை அவனும் அவளும் எப்படி மறப்பார்கள்? என்றும் போல அன்று தினமும் மாடன் மடத்துக் குளத்தங் கரையில் வி த் ைத செய்து கொண் டிருந்தான்; வேடிக்கை காட்டினன். பாம்பையும் கீரியை யும் தோளோடு தோள் நின்று கைகுலுக்கச் செய்தான். மகுடி ஊதிஞன். பாம்புகள் படம் விரித்தாடின. அவன் கரங்களில் அவை நடம் புரிந்து முத்தமிட்டுக் களித்தன. சபை கூடியது. சில்லறைக் காசுகள் ஒட்டைத் தட் டொன்றில் டங் டங்’ என்று நாதமிட்டு ஓடி விழுந்தன. - - அப்பொழுது கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தான். அது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. "ஐயாமார்களே...... இப்போதான் கடைசிக் கட்ட மாக்கும். இப்போ பாருங்க, இன்னிக்கு புடிச்ச நல்ல பாம்பு இது, பல் புடுங்கப்படல்லே. இதை என்னைக் கடிக்க விடறேன். எங்கிட்ட இருக்கிற மூலிகை வேராலே கண்மூடுகிற நேரத்திலே விஷத்தை இறக்கிப் போடு வேன். இதுபோலே வேறே ஒருத்தராலேயும் முடியவே முடியாது. இந்த வேரு ரகசியம் எங்க பாட்டன் பூட்டன்