பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மல் உள்ளம் 99 பெற்றுப் பல பிறவிகளில் சாதனை செய்து அவனை அடைய லாம்" என்று சொன்னல் நிச்சயம் என்றே தோன்றும். அப்படியின்றி, "இந்த உடம்பு இருக்கும்போதே காண லாம்' என்பது மிக மிக விரைவில் கிடைக்கும் வெற்றி என்பதில் ஐயம் இல்லை. 'இத் தேகமொடு காண்பனே?" என்று தாயுமானவர் எங்குகிரு.ர். "இன்னும் இருபதாண்டுக்குள் கிடைக்கும்" என்ருல் இன்னும் பெரிய ஆச்சரியம். "இக்த ஆண்டு முடிவுக்குள் கிடைத்துவிடும்" என்பது கம்பவே முடியாக வியப்பு, இந்த மாதம், இந்த வாரம். இன்றைக்கே என்று குறுக்கிக் கொண்டே வந்தால் கால அளவு சுருங்கச் சுருங்க வியப்பின் அளவு பெருகிக்கொண்டே வரும். இறைவன் அருள் இறைவனே திருவருள் செய்தால் இந்த விரைவு உண்டாகும். நம் முயற்சியில்ை சாதிப்பதாக எண்ணிக் கொண்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். கம் முயற்சி யைக்கொண்டு நம் வெற்றியை அளவிட இங்கே வகை இல்லை; கம் முயற்சி மாத்திரம் இருப்பதானுல் நாம் என் மைக்கும் இறைவன் சேவடியை அடைய முடியாது, அவனுடைய அருள்வேண்டும். அவன் ஆர்வத்துட்ன் வந்து அருள் செய்வதனால்தான் நாம் உய்கிருேம். காம் அவன்பால் வைக்கும் அன்பைவிட அவன் கம்பால் வைக்கும் அருள் கோடி கோடி மடங்கு பெரியது. நம்முடைய அன்பு, குழந்தை பெருஞ் சுமையைத் தூக்க ஆசைப்படுவது போன்றது. அதைத் துரக்க வேண்டு மென்று குழந்தை முயலும்போது, அம்மா ஒருகை கொடுத்துத் தூக்கி வைத்து விடுகிருள். ஆனல் குழங்தை தாக்கி வைத்ததாகவே