பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மல் உள்ளம் 103 வலமான பயணம் இனி முருகப் பெருமான் இருக்கிற இடங்கள் இன் னவை என்று சுட்டிக்காட்ட வருகிருர். எடுத்தவுடன் திருப்பாங்குன்றத்தைச் சொல்கிருர், மதுரை மா நகரில் வாழ்ந்தவர் நக்கீரர். ஆகையால் அவர் திருமுருகாற் றப் படைப் பயணத்தைத் திருப்பரங்குன்றத்தி விருந்து தொடங்குகிரு.ர். அங்கே இருந்து திருச்சீரலைவாய் சென்று, அப்பால் வடக்கே சென்று திருவாவினன் குடியை அடைந்து, அங்கிருந்து கிழக்கே சென்று திருவேரகத்தை வணங்கி, பல மலைகளையும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, கடைசியில் மதுரையை அடுத்த பழமுதிர் சோலையில் வந்து முடிக்கிருர். இது வலமாக வரும் பயணமாக இருக்கிறது. -