பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 21 மீண்டும் மதுரையை அடைந்தார் என்றும் உள்ள செய்தி எல்லாவற்றுக்கும் பொதுவானது. கதைக்கு ஆதாரமான செய்தி சிறியதாக இருந்தாலும், புலவர்கள் தங்கள் தங்கள் கற்பனை வளத்தினல் விரிவாகப் பெருக்கிச் சொல்லியிருக்கிருர்கள், திருமுருகாற்றுப்படை மிகச் சிறந்த நூல் என்பதும், பெரிய பயனேத் தருவது என்பதும், ஆற்றுப்படைகள் எல்லாம் தோன்றியதுபோலத் தோன்றியது அன்று என்பதும், உணர்ச்சிக் கொந்தளிப்பின் உருவமாக அது எழுந்தது என்பதும் மேலே சொன்ன புராணங்களிலுள்ள வரலாறுகளால் ஊகித்துத் தெரிந்து கொள்வதற்குரியன. இனி அது பிறந்த கதையைப் பார்ப்போம்,