பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 1. திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி உறுார்த் தாங்கிய மதனுடை கோன்தாள் செறுகர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை மறுஇல் கற்பின் வாள்துதல் கணவன், கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள் உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ாறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன், மால்வரை கிவந்த சேண் உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக் கணக்கால் வாங்கிய நுசுப்பிற் பணத்தோள் கோபத் தன்ன தோயாப் பூந்துகில் பல்காசு கிரைத்த சில்காழ அல்குல் கைபுனேந்து இயற்ருக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனே அவிர்இழைச் சேண் இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித் துணையோர் ஆய்ந்த இணைஈர் ஒ திச் செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளைத் தூ இதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருதுதல் மகரப் பகுவாய் தாழமண் அணுறுத்துத் 10 15 20 25