பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 நேரிய வழியில் ஆற்றுப்படுத்தி, ஒழுங்காகப் பள்ளிக்கு அனுப்பி, ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவும் தெளிந்த கல்வியைப் பயிலவும் செய்யும் பெற்றோர்களுக்கும் நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம். சில பிள்ளைகள் பள்ளி வேளை யில் வெளியே சென்றும் வேறு வினை விளைத்தும் உள்ள போதெல்லாம் சில பெற்றோர்கள் அவர்களை அழைத்து வந்துவிடுவதும் அவர்களைப் பற்றி உடன் எங்களிடம் சொல்லி, அவர்களை அழைத்துத் திருத்த வழிகாண்பதும் நாங்கள் நன்றியுணர்வோடு குறிப்பிட வேண்டிய செயல் களாகும். இவ்வாறாய-நல்ல பிள்ளைகள் நல்ல பெற்றோர் கள் நலங்காணும் மற்றவர்கள் ஆகியோர் இடையில் நாங்கள் நிமிர்ந்துநின்று செயலாற்றுகின்றோம். அவர்கள் அனைவ ரையும் இருகை கூப்பி வணங்கி மேலே செல்கின்றேன். -