பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i47 இவ்வாறு ஒவ்வோர் இடத்திலும் பல்வேறு முட்டுக் கட்டைகளைத் தகர்ந்தெறிந்து நல்லவர்தம் நேரிய உதவி யினாலே இன்று புதுமனையில் கட்டடம் கட்டிப் புதுப்பள்ளி யினைத் தொடங்கியுள்ளோம். பெற்றோர்களும் பொது மக்களும் மற்றவர்களும் எ ங் க ளு க் கு அளிக்கும் ஆதரவினாலும் ஊக்கத்தினாலும் மேலும் மேலும். நன்கு செயல் பெறலாம் என்ற நம்பிக்கையோடு இப்பகுதியினைத் தாண்டி அடுத்த பகுதிக்கு அடியெடுத்து வைக்கலாம் என எண்ணுகிறேன்.