பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை அன்று - முற்றாத் தொடர்ச்சி கடந்த பதினெட்டு ஆண்டு நிகழ்ச்சிகளில் இன்னும் எழுத வேண்டுவன பல உள. இந்த நூலின் முந்திய பகுதியை எழுதி முடித்தபின்னர் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி எழுத வேண்டும். இந்த வரலாறு இத்துடன் முடிவதும் அன்று: முற்ருத் தொடர்ச்சியாக நீண்டு கொண்டே செல்வது. எழுதத் துடிக்கின்றது. எனினும் முன்னரே முடிவுசெய்த அளவிலும் காலத்திலும் நின்று குறித்த நாளில் நூலை வெளியிட வேண்டும் என்ற கொள்கையால் இந்த அளவோடு இப்போது அமைகின்றேன். முன்னுரையில் சுட்டியபடி இடையில் நின்ற இருபத் தைந்தாண்டின் என் வரலாற்றினையும் இப்பகுதியிலும் பின்பும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து எழுத முனைகின்றேன். இறையருள் கூட்டும் எனும் துணி புடையேன். - வருங்காலம் வையகமெலாம் துயர் தீர்கவே' என்ற பெரியோர் வாக்கு பலிக்கும் வகையில் நலம்பெற்றுத் திகழும் என்று அமைதிகொள்கின்றேன். வாழ்க! வளர்க!