பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தில்லை: பட நினைப்பதும் இல்லை. நேர்மைக்கு அது தேவையும் இல்லை. இரண்டு இரண்டரை ஆண்டு குழந்தை முதல் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் பெரிய மாணவர் வரையில் காலையில் கலந்து பாடி, இறைவனைப் பரவி, பின் பயின்று, கூடி விளையாடிச் செல்லும் அன்றாடக் காட்சியினைக் கண்டு கண்டு களித்து நான் என்னை மறந்து நிற்கின்றேன். சென்ற காலத்தைத் திரும்பிப் பார்க்கும் போது திகைப்பே உண்டாகிறது. என் அன்னையின் பெயர் என்றும் நிற்கும் என்ற உறுதி கண்டு மகிழ்கின்றேன்.