பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 'மலைபோல் வந்த பல எதிர்ப்புக்கள், மாறுபாடுகள் கொடுமைகள், முட்டுக்கட்டைகள் அனைத்தையும் கடந்து, இன்று நான் சற்றே தலை நிமிர்ந்து அன்னைப் பணியினை ஆற்ற முடிகின்றது. திரும்பிப் பார்த்து வந்த வழியினை எண்ணி எண்ணித் திகைக்கும் அதே வேளையில், வழியிடை யிருந்த கல்லை முள்ளையும் அகற்றி மேடுபள்ளங்களைச் சரிசெய்து செம்மைப்படுத்தி என்னை நடத்திக்கொண்டு வந்த அனைவரையும் எண்ணி வணங்குகிறேன்! வாழ்த்து கிறேன். இனியும் தொடர்ந்து இக்கல்விப் பணி சற்றே விரிவடைந்து விள்க்கமுற்று ஒங்கும் என்பதையும் அதற்கு அனைவரும் ஆதரவாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பார்கள் என்பதையும் உணர்ந்து இவற்றையெல்லாம் ஆக்கி அளிக்கும் ஆண்டவன் பதமலர் பணிந்து அமை கின்றேன்.