இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38 ❖
திரும்பி வந்த மான் குட்டி
உண்டி வில்
சோமு படிப்பிலே கெட்டிக்காரன். குணத்திலேயும் தங்கக் கம்பியாகத் தான் முன்பு இருந்தான். ஆனால், இப்போது?
சோமுவின் தெருக்கோடியில் வாசு என்று ஒரு பையன். அவன் தினமும் பள்ளிக்கூடத் திற்குப் புறப்படுவான். ஆனால், அங்கு போய்ச் சேர மாட்டான். வழியில் எங்காவது ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்குவான்; அல்லது, பள்ளிக் கூடம் போகாத பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவான். ஆனால், சாயங்காலம் பள்ளி