அழ. வள்ளியப்பா
❖ 45
நாங்க ஃபேனைப் போட மாட்டோம். ஆனால், யாரும் புதுசா வருகிறவங்க ஃபேனைப் போட்டுட்டால்...? இந்தக் குருவிக்கும் ஆபத்தாயிடுமே! அதுனாலே ஃபேனைக் கழற்றி உள் அறைக் குள்ளே வச்சுட்டோம்.”
சித்தப்பா சொன்னதைக் கேட்கக் கேட்க, சோமுவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ‘தாய்ப் பறவை இறந்ததும், அந்தக் குஞ்சுகளெல்லாம் என்ன பாடுபட்டிருக்கும்? எப்படிப் பசியாலே, துடி துடிச்சிருக்கும்? அதுகளுக்காக நம்ம சித்தப்பாவும் சித்தியும் எவ்வளவு கவலைப்பட்டிருக்காங்க! அடுத்த குருவி அடிபடக்கூடாதேன்னு ஃபேனையே கழற்றி வச்சிட்டாங்களே!’ என்று நினைத்துப் பார்த்தான் கண்கள் கலங்கின.
சித்தப்பாவின் வீட்டிலே இருந்த இருபது நாட்களும் சோமு, தான் செய்த தப்பை நினைத்து நினைத்து வருத்தப்பட்டான்.
ஊருக்குத் திரும்பினானோ இல்லையோ, முதல் வேலையாக அந்த உண்டி வில்லை எடுத்துக் கொண்டு நேராக வாசு வீட்டுக்கு எதிரிலேயே போய் நின்றான். சோமுவைக் கண்டதும், வாசு அவனைக் குதுகலமாக வரவேற்றான்.