பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 ❖

திரும்பி வந்த மான் குட்டி



“சீ, பன்றியோடு சேர்ந்த கன்றும் கெடும்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. உன்னோட சேர்ந்து நானும் புத்தி கெட்டுப் போனேன். ஐயோ! எத்தனை பறவைகளைத் துடிதுடிக்கக் கொன்னுட்டேன்! அதுகளுடைய குஞ்சுகள், என்ன பாடுபட்டிருக்கும்? இனிமேல், இந்த உண்டி வில்லுக்கு வேலையில்லை” என்று ஆவேசம் வந்தவன் போல் பேசிவிட்டு அந்த உண்டி வில்லை அங்கே கிடந்த ஒரு கல்லின் மேலே வைத்தான். இன்னொரு கல்லாலே அதைத் தூள் தூளாக உடைத்தான்.

“உண்டிவில் முறிஞ்ச மாதிரி நம்ம சிநேகமும் இன்னியோடு முறிஞ்சுது” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக வீட்டுக்குத் திரும்பினான். பிறகு தான், அவன் மனம் ஓரளவு நிம்மதி அடைந்தது.