அழ. வள்ளியப்பா
❖ 49
“சரிதான். டெலிபோனில் பேச வேண்டுமா? அதெல்லாம் முடியாது. இன்று உனக்குக் கொடுத்தால் நாளைக்கு இன்னொருவன் வந்து கேட்பான். அதெல்லாம் கெட்ட பழக்கம். முடியாது. இது என்ன, பொது டெலிபோனா கண்டவனெல்லாம் உபயோகப்படுத்த?”
“அப்படிச் சொல்லக்கூடாது. ஆபத்துச் சமயம். குழந்தை இருக்கிற நிலையிலே, இந்த நேரத்திலே வெளியிலே எடுத்துப் போக யோசனையாயிருக்கிறது. தயவுசெய்து...”
“தயவாவது செய்றதாவது? குயவன் பானை சட்டி செய்கிறானே, அதைப் போலே என்னைத் தயவு செய்யச் சொல்கிறாயா? முடியாது. வீணாகத் தொந்தரவு செய்யாதே. அப்படி அவசரமாயிருந்தால் மூணாவது தெருவிலே இருக்கிறதே பொது டெலிபோன், அங்கே போய்ப் பேசு” என்று கூறி வெளியில் அனுப்பிவிட்டார் கார்த்திகேயர்.
பாவம், பக்கத்திலே வேறு டெலிபோன் எதுவும் இல்லாததால், அந்த மனிதர் மூன்றாவது தெருவுக்கு ஓடினார். அங்குள்ள பொது டெலிபோன் உதவியால் டாக்டரை வரவழைத்துக் குழந்தையைக் காட்டினார். நல்லகாலம், கார்த்திகேயர் தயவு இல்லாமலே குழந்தை பிழைத்துக் கொண்டது!
தி.வ.மா. - 4