பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54 ❖

திரும்பி வந்த மான் குட்டி



‘சரி, இதையும் நம்பிப் பயனில்லை,’ என்று அந்தச் சிறுவன் எண்ணினான். நேராகக் குடல் தெறிக்க நெருப்பணைக்கும் படை இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான். தகவல் அறிவித்தான். உடனே அந்தப் படை புறப்பட்டது.

மணியை அடித்துக் கொண்டு வெகு வேகமாக நெருப்பணைக்கும் படையினர் அங்கு வந்தனர். அவர்கள் வந்து சேருவதற்கும், கார்த்திகேயரின் மாளிகை முழுவதும் பற்றி எரிவதற்கும் சரியாக இருந்தது!