இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62 ❖
திரும்பி வந்த மான் குட்டி
இரு காக்கைகள்
அந்தக் காட்டிலே நிறைய நிறைய மரங்களும் செடிகளும், கொடிகளுமாக இருந்தன. அந்த அடர்த்தியான காட்டிலே ஒரு மரத்திலே இரண்டு காக்கைகள் வசித்து வந்தன. ஒரு கிளையிலே ஒரு காகம் கூடுகட்டியிருந்தது. இன்னொரு கிளையிலே மற்றொரு காகம் கூடு கட்டியிருந்தது.
இரண்டும் அதிகாலையிலே காட்டை விட்டுப் புறப்படும். மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு