இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திரும்பி வந்த மான்குட்டி
ஒரு காடு. அந்த காட்டிலே ஒரு மரத்தடியில் இரண்டு புள்ளி மான்கள் படுத்திருந்தன. அவற்றிலே ஒன்று அம்மா மான், மற்றொன்று குட்டி மான்.
அம்மாமான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எப்போதும் என் கூடவே இருக்கணும். தனியாக எங்கேயும் போய்விடாதே!” என்றது.
“ஏம்மா, தனியாகப் போகப்படாதா?” என்று கேட்டது குட்டிமான்.